
திரு வேலுப்பிள்ளை மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ தேசியத்தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு டென்மார்க் நாட்டில் வீல்ஸ் மாநிலத்தில் 18.05.2024 இன்று மாலை 2.30 மணியளவில் நடைபெற்றது. பல முன்னாள் போராளிகள் தலைவருடன் கூடவே பயணித்த பல போராளிகள் மற்றும் தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்..

செல்வி நிஷா, திரு. தயாமோகன், திரு. திபாகரன், திரு துளசிச்செல்வன் போன்றோர் உரையாற்றியிருந்தனர். மிகவும் அமைதியான முறையில் உணர்வுபூர்வமாக தமிழீழ தேசியத் தலைவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் விளக்கேற்றி மலர்வணக்கம் செய்யப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
